Saturday 9 May 2020

இந்தியா: அரசியல் பொருளாதாரப் பார்வையில் (1)

இந்தியா: அரசியல் பொருளாதாரப் பார்வையில்!!
பாகம்: 1


”நாம் நாகரீக சமுதாயத்தில் வாழ்கிறோம்... ”


இதன் அர்த்தம் என்ன?
#CivilizedSociety

எந்த சமுதாயம், கட்டுப்பாடும், சுய ஒழுக்கம் கொண்டு, விதிகள், சட்டங்கள் கொண்டு திட்டமிட்ட ஒரு பாதையில் செல்கிறதோ அதுவே "நாகரீகமான" சமூகம்... மற்றவை "காட்டுமிராண்டி" விலங்குகள் போல வாழும் சமூகம்... #Unsustainable #Survival-of-the-Fittest

இத்தகைய கட்டுப்பாடு ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறு காரணிகளால் கட்டமைக்கப்பட்டதை நாம் அறிவோம்...

1. மத கோட்பாடு, மத நம்பிக்கை: அக்னி, பிர்த்யு, வாயு தொடங்கி  சொர்கம்- நரகம், கர்மா, சரியத், பிலேஸ்பேமி, என்று உலகில் உள்ள எல்ல மத கருத்துகளின் அடிப்படையுமே மனிதனை நல் வழிப்படுத்துதலே!! (Religion and God-fear)

2. அரச கட்டளை: பாகுபலி படத்தில் இராஜ மாதவின் கட்டளையே சாசனம் என்ற கோட்பாடு போலதான் (King's Army or Police-State)

3. சட்டத்தின் ஆட்சி (Rule of Law and Constitutionalism)

4. சந்தை பொருளாதாரம் (Market Economy and Public Choice)


ஆமாம், இன்று சந்தைக்கு ஏற்றவாறு சட்டங்கள் திருத்தப்பட்டும், திட்டங்கள் வகுக்கப்படும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம்...


சந்தை என்றவுடன் பெரும் முதலைகள், முதலாலித்துவம் என்று என்னிட வேண்டாம்.


“சந்தை” என்பது (Demand) தேவை (மக்கள்/ வாடிக்கையாளர்) அதற்கு ஏற்ற உற்பத்தி (Production) மற்றும் அளிப்பு (Supply), மக்களின் வாங்கும் சக்திக்கு (Purchasing Power) ஏற்ற விலை நிர்னயம் (Equilibrium Price), அதில் ஏற்படும் இலாபத்திற்கு (Profit) ஏற்ப முதலீடு (Investment), மறுபடி கட்டம் ஒன்று “தேவைக்கேற்ப உற்பத்தி”


இந்த சுழற்சியை நாம் அறிந்த செயல்படுவது அவசியம், இல்லையென்றால் மற்றவர்களின் கணகீட்டுகுள்ளே சிக்கிகொள்ள நேரிடும்!! சந்தை எந்த பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் (Public Choice), விளம்பரப்படமோ, விநியோகதார்களும் அல்ல!!


இதை செயல்படுத்த ஒவ்வொறு நாட்டின் சமுதாய, பாரம்பரிய, பழக்க வழக்கத்திற்கு ஏற்ப சட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளது “அரசியல் அமைப்பு சட்டம்” Law of the Land (Constitution of India). இந்த தொடர் அப்படிபட்ட கருத்துகளை “அரசியல் பொருளாதாரம்” என்ற தலைப்பில் உங்களிடம் கொண்டு சேர்க்க முற்படுகிறது....



”அரசியல் பொருளாதாரம்" என்பது மார்க்சிய பொருளாதாரமாக (Marxian Economy) சில இடங்களில் கருதப்படும் அல்லது பொருளாதார வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு பரிந்துறைக்கும் ஆலோசனையை (Policy Recommendation) குறிப்பிடப்படும். ஆனால், இந்த தொடரில் “அரசியல் பொருளாதாரம்” (Political Economy) என்பது ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் அந்நாட்டின் சட்டம், நடைமுறை, அரசுமுறை அவற்றுடன் எப்படி இயங்குகிறது என்று அறிய முற்படுவதாகும்.

இந்த தொடரில் நாம் பல செய்திகளை தொட்டு பயனிக்க போகின்றொம்.....

1. இந்திய நாகரீகம்.

2. இந்திய அரசியலமைப்பு.

3. இந்திய பொருளாதாரம்.

4. இந்திய தத்துவங்கள்.


விவேகானந்தர் "இந்தியாவின் எதிர்காலம்" என்று மெட்ராஸ் மாகாணத்தில் நடத்திய உரையில்... மனு-ஸ்மிரூதி போன்ற பழமையான நீதி தொகுப்பு காட்டுமிராண்டி தனமும் கொண்டிருப்பது இயல்பு... அதை அப்படியே பின்பற்றாமல் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படுகிறது என்றும் அதுவே அவசியம் என்றும் கூறுகின்றார்.

இந்திய அரசியல் அமைப்பு 26.11.1949 அன்று நிறைவேற்றப்படுகிறது.

அதற்கு முன் தினம் அண்ணல் அம்பேத்கர் கூறுகின்றார், "இன்று முதல் காந்திய வழியான அஹிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை எல்லாம் மறந்துவிடுங்கள்... எல்லாவற்றிக்கும் தீர்வு இந்த சாசனத்தில் உள்ளது.

"சட்டப்படியான பிரட்சினைகளுக்கு சட்டபடியே தீர்வு காண வேண்டும்"

இதையேதான் மனு-ஸ்ம்ரிதி, அர்தசாஸ்த்ர, கமண்டக-நீதி எல்லாம் "மத்சய நியாயம்" என்று கூறுகிறது.

ராஜியம் (ராஜாக்கம்) என்பது அரசு-ஆட்சி...  அதற்கு எதிர் சொல் "அராஜகம்" அரசு கட்டுபாடற்ற நிலை (Anarchy)... இந்த நிலையில் கை ஓங்கியவன் மற்றவறை அதிகம் சுரன்டுவான், வஞ்சிபான் என்பதே "மத்சய நியாயம்" Law of Fish/Jungle - Big Fish eats Small Fishes!!!


யதி ன ப்ரனயத் ராஜா தன்ட் தண்டேய்ஸ்வதந்திதா

(தண்டிக்க படவேண்டியவன் சலிப்பின்றி அரசனால் தண்டிக்க படவில்லை என்றால்)


சூலே மத்ஸ்யானிவபக்ஷ்யன் துர்பாலன் பலவத்ரா

(வலிமையானவன் எளியவர்களை விழுங்கிவிடுவான்)

(மனு-ஸ்ம்ர்தி 7.20)

அதனால் தான் இந்திய அரசியலமைப்பை இன்று பலர் "நவீன-வேதம்" என்கின்றனர்!! Modern Manu Ambedkar


தொடரும்......

மொழி உளவியல்: பிரிவினை யுத்தி

மொழியின் தோற்றம் மற்றும் மனித இனங்களில் அதன் பரிணாம வளர்ச்சியானது பல நூற்றாண்டுகளாக ஊகத்திற்கு உட்பட்டவை. நேரடி ஆதாரங்கள் இல்லாததால் இதனை படிப்பது கடினம்.


மானுடவியலாளர்கள் (Anthropologist) மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான உறவுகளைப் பற்றி பேசுகிறார்கள். மொழியை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதுவது உண்மையில் யதார்த்தம்.

மொழி சார் வளர்ச்சி இயல்பானது, மரபு ரீதியானது & இது ஒரு மனிதன் தன் சமூகத்தின் வழி பெறப்பட்டது. மொழி இலக்கண, இலக்கியத்தை மட்டும் கடத்தாது, அது உணர்வுகளையும், கலாசார அம்சங்களையும் கடத்தும்.

ஒரு குறிப்பிட்ட இனத்தின் நாட்டுப்புறக் கதையாக இருந்தாலும் சரி, அன்றாட பேச்சுவழக்காக இருந்தாலும் மொழியும் கலாச்சாரமும் கைகோர்த்துச் செல்கின்றன.

தெரு கூத்துகளில் கடவுளாக வேடமிட்டு நடிப்பவரை யாரும் விமர்சனம் செய்வதில்லை. அதுவே யோகி பாபு, நயன்தாரா என்றால் எதிர்ப்பு வருகிறது. அவரவர் அந்த வேடம் தரிக்கும் நோக்கத்தின் அடிப்படையும் இதற்கு முக்கிய காரணம், இது கலாசாரத்தோடு சார்ந்தது.

நீங்கள் வளர்ந்த இடத்தைப் பொறுத்து மொழி பேசுவது வேறுபடும். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் சில சைகைகள், வெளிப்பாடுகளும், உள்ளுணர்வுகளும் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சுருதி, ஒலிப்பு, பேசும் வேகம், முகபாவங்கள், சைகைகள் மற்றும் தயக்க, சத்தங்கள் ஆகியவை மொழியோடு தொடர்புடைய காரணத்தினால்  இவற்றை "துணை மொழி" Para-Language என்றும் கூறுகின்றனர். நாம் பேசும் மொழியை இது பெரிதும் பாதிக்கிறது. இதை நாம் இந்தியர்கள் "ஆங்கிலம்" பேசும் வேறுபாட்டின் வழி காண முடியும், மலயாளியின் ஆங்கிலம், தெலுங்கரின் ஆங்கிலம், இந்திகாரர்களின் ஆங்கிலம்... எல்லாம் வேறுபடும். நீங்கள் கவனித்திருக்கலாம். நீங்கள் அவ்வாறு செய்யும்போது உங்கள் சைகைகள் அல்லது பழக்கவழக்கங்கள் கூட மாறுவதை நீங்கள் காணலாம். அதனால் நீங்கள் Peter என்றோ, Scene Party என்றோ கூட அழைக்கப் பட்டிருக்கலாம்.

மொழியும் கலாசாரமும் பின்னி பிணைந்தது. மற்ற மொழியை, அவர் பண்பை, உணர்வை விமர்சிக்க யாருக்கும் தகுதியும் இல்லை உரிமையும் இல்லை.

ஆனால், இது தொன்றுதொட்டு எல்லா மொழி திரைப்படங்களில் செவ்வனே செய்ய பட்டு வந்ததும் வரலாறு!!

பி.கு.: ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் தெரிந்தவரின் பார்வையும் புரிதலும் விசாலமானது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்!

பன்னிரண்டு ஆண்டகளுக்கு முன் ஒரு திரைபட சர்சையில் மனமுடைந்த நம்மவர், "காலச்சாரம்" என்பது மாற்றத்திற்குறியது என்று "தெளிவாக" விளக்குவதை காண்க!!


Thursday 7 May 2020

பகுத்தறிவு: 50% தள்ளுபடி!!!



ஆன்மீகம் என்பது எல்லா உயிர்களிலும் ஒரே ஆன்மாவை காண்பது.

ஆத்திகம் என்பது எல்லா உயிர்களிலும் இறைவனை காண்பது.

மனிதம் என்பது இனம், மதம், மொழி கடந்து எல்லா மனிதனையும் காண்பது.

பகுத்தறிவு என்றால் கெட்ட வார்த்தையாக ஒரு குரூப் பார்கிறது, மற்றொன்று அதுக்கு அர்த்தம் தெரியாமலே கொண்டாடுது!!

காலக் கொடுமை!!!

பகுத்தறிவு என்றால் என்ன?

பிராமன எதிர்ப்பா!?

சமஸ்கிருத எதிர்ப்பா!?

வட மொழி எதிர்ப்பா!?

விதண்டா வாதமா!?

பெரியாரியமா!? இல்லை திராவிடமா!?


நியாங்களை, தர்க வாதங்களை "கண்மூடிதனமாக" மறுப்பதும் விமர்சனங்களை, விதண்டாவாதங்களை "கண்மூடிதனமாக" ஏற்பதும், பகுத்தறிவா??

எதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டது, தீர்மானம் ஏற்றப்பட்டது என்று எதையுமே ஆராயாமல் யூகத்தின் அடிப்படையில் மட்டும் கேள்வி கேட்பது, பரிந்துறைகள் கூறுவது, பகுத்தறிவா??

பகுத்தறிவு என்பது உணர்ச்சிவசப்படாமல்  எல்லா கேள்விகளிலும் அறிவை காண்பது.

ஒரு விஷயத்த ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ போதுமான காரண-காரணி இல்லை என்றால் அமைதிகாப்பதும் பகுத்தறிவே!!