Thursday 30 April 2020

மானமுமில்லை.... அறிவுமில்லை.....



இன்றை IT WING இதை எப்படி பயன்படுத்துகிறது என்றால்.... காலக் கொடுமை... எல்லோரும் இதை ஒரு STRATEGY உத்தியாக மாற்றி விட்டனர்....

அதாவது "மானமுள்ளவன்" நூறு என்ன ஆயிரம் பேர் வந்தாளும் சமாளிக்கலாம்....
அவன "சீ..சீ..." சொன்னலே போதும், எதிர்த்து மாற்று கருத்து சொல்ல அச்சபட்டு போயிருவான்...

அதையும் மீறி எதிர்த்து நின்றால், இன்னும் கொஞ்சம் ஆபாசமாக, கொச்சை படுத்துனா போதும்... வெற்றி வாகை நமக்கு தான்...

Every IT WING's STRATEGY!!

நாளைக்கு "சுய கட்டுபாடோ, ஒழுக்கமோ" இல்லாத உன் தலைவனின் வீடியோ/அந்தரங்கம் அவங்க கிட்ட சிக்கினா போதும்.... Breaking Point....  உன் தலைவன் அவங்க மெட்டுக்கு ராகம் பாடுவான்!!

நீ கண்ண மூடிட்டு உன் தலைவன பின் தொடருவது மிக பெரிய அபத்தம்.

"மானத்தை" பேரம் பேசி எவரையும் அடிபணிய வைக்கலாம்.... IT WING STRATEGY.... இது பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் நிலை.... தொண்டன்?? உனக்கு மானமில்லையா??

நம்ம எல்லோரும் இதே திசையில் பயணிக்க துவங்கிவிட்டனர்! காலக் கொடுமை!! ஒரு அரசியல் கொள்கையும் இல்ல, ஒரு பொருளாதார கொள்கையும் இல்லை.... தனி மனித தாக்குதல், கொச்சை படுத்துதல், வெறுப்பரசியல்.... வேறு ஒன்றும் தெரியாது!

நம்ம நம்புவது மட்டும்தான் உண்மை, அதை பேசுபவன் மட்டுமே அறிவாளி!!

இன்றைக்கு நீங்க சொல்கிற.. ஏதோ உ.பி., சங்கி, அடிமை, இரண்டு ரூபாய், 200 ரூபாய் எல்லாம்.... எல்லாம் கடந்து நிற்கிறான்.... அதான் நீங்க சொல்வது போல "முட்டு கொடுக்குறான்" ஆம், தன் பக்கம், தன் தலைவன் பக்கம் தவறு இருந்தாலும், அதை நியாய படுத்த விடா முயற்சி செய்யும் (i.e. மானம் கெட்ட) மனநிலை!! சித்தாந்த தவறுகளை விட்டு கொடுக்காமலிருபது கூட பரவாயில்லை, தலைவர்கள் யார்? அவரும் மனிதர்கள் தானே, தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா என்ன??

ஆனால் இவன் "அறிவு" வசத்தில் வாதிடுகிறானா இல்லை "உணர்ச்சி" வசத்தில் வாதிடுகிறானா!? என்பது தான் கேள்வி....

"அறிவின்" வசபட்டவனுக்கும், "உணர்சியின்" வசபட்டவனுக்கும் உள்ள வேற்றுமையை இந்த காட்சியில் நன்றாக அமைத்துள்ளனர்!!


உணர்ச்சியின் வசத்தில் உள்ளவனை சுலபமாக கைகூலியாக பயன்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது.

Armchair Revolutionary என்ற சொல்லாடல் 20 ஆம் நூற்றாண்டுகளில் புழக்கத்திலிருந்தது. இவர்கள் தன் கறுத்துகள் மற்றும் எழுத்துகளின் மூலம் கிளர்சிகளை, புரட்சிகளை உண்டாகினர். அது நிறையவே அறிவு சார்ந்ததாக இருந்தது.

இப்போது 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் Mouse Click Revolutionary என்று கூறலாம், இவர்கள் IT WING வழியாக அர்த்தமற்ற அரைகுறை கறுத்துகளால் மக்களை குழப்பி ஆட்சி மாற்றம் கொண்டு வருகின்றனர். அதை சுமக்க பெரிய "சுய அறிவற்ற" கழுதை கூட்டமே இருக்கிறதே!!

பொதுவாக இரண்டு பெரிய கட்சிகள் தாம் மாற்றி மாற்றி ஆட்சி பொருப்பில், அரசியல்-பொருளாதர கொள்கையில் பெரிய மாற்றமின்றி ஆளப்போகிறது.

இதை ஆதரித்து நிற்கும் இருவேறு முட்டாள் கூட்டம் தான் மாற்றி மாற்றி "ஜனநாயகத்தை" தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறது.

எனக்கு இந்த பொய் கலந்த உண்மையும் சரி, உண்மை கலந்த பொய்யும் சரி.... எல்லாம் ஒன்று தான்...

மரிதாஸ் இருக்கட்டும் ஜெயரஞ்சன் இருக்கட்டும் யார் அடித்து விட்டாலும் பொய் பொய் தான்... மதுவந்தி பேசினாலும் தமிழன் பிரசன்ன பேசினாலும் அநாகரீகம் அநாகரீகம் தான்... மாற்று அரசியல் சீமான் பேசினாலும் கமல் பேசினாலும் அதன் அடிபடையில் விமர்சனம் மட்டும் தான் இருக்கு....

இதை நீ உணரும் போது உன் அறிவு மற்றவரை உ.பி. யாக, சங்கியாக, அடிமையாக பார்காமல்... மனிதனாக பார்க கற்றுதரும்!!

கறுத்துக்களை எதிர் கறுத்து கொண்டு விமர்சிக்க கற்றுகொள்ளுங்கள்!!

விதை ஒன்று போட்டல் சுரை ஒன்றா காய்கும்!!!

ஏதோ ரூ.2, ரூ.200 சொல்கிறார்கள்... இந்த ஆண்டவர்-அடிமை சந்தை நிலவரம் பற்றி First Hand Experience எனக்கு இல்லை.... விலை பேசி கூலி வாக்குபவர்கு மட்டுமே உண்மை நிலை தெரியும்....

பெரும்பாலும் IT WING யின் நோக்கம் Echo Chamber களை உறுவாக்கவது மட்டுமே!!

இவங்க பதிவிடும் 2 Minute மீம்ஸ்கள், 10 Minute வீடியோ... வேகமாக பரப்ப... கூலி அவசியம் இல்லை நம் முட்டாள் தனமும், உணர்ச்சி பெருக்கும் தான் இவர்களின் முதலீடு!!

எல்லாம் அறிவு பூர்மா தோனுது ஆனால் குழப்பமாகவும் இருக்கு....அதில் படைப்பாற்றல் இருக்கும் ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் தான் அதிலிருக்கும் முடாள்தனம் விளங்கம்....

அதேதான் அப்போ, மீம்ஸ் போடுகிறவன் ஐஞ்சுகோ, பத்துகோ பிழைத்து கொள்கிறான். அதை உணர்ச்சி வயத்தில் Share செய்து சுமக்கும் "கழுதைகள்" தாம் அரை வாங்குது!! இவனா எதையும் படித்தும் பார்க்க மாட்டான், தேடியும் பார்க்க மாட்டான்.... 

IT WING யுத்தி மக்களை சுயமாக சிந்திக விடாமல்... உ.பி., சங்கி, தம்பிகள், ஆண்டவர் அடிமை, என்று இனம்கண்டு Echo Chamber உறுவாக்குகிறார்கள். அங்கு ஒரே "பொய்யை" மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதமாக சொன்னால் ஒரு அறிவீன கூட்டத்தை நம்ப வைக்க முடியும் என்ற யுத்தி கையாளப்படுகிறது!!

இந்த Echo Chamber களை தகர்த்தாலொழிய சுய அறிவோ, முன்னேற்றமோ சாத்திமில்லை....


சாமானியன் மொழியில் பேசினால்தான் கொஞ்சமாச்சு "பகுத்தறிவு" வளர்க்க முடியும் என்பது வரலாறு....

மறுக்கவில்லை...

ஆனால், அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்டாமல், அவர்களை ஒருமையில் பேசுவது, பெயர் வைப்பது, கொச்சை படுத்துவது... எது போன்ற மனநிலை!!?

இலக்கு ஒன்றாக இருப்பினும், சரியான காரண-காரணிகளோ, நியாயமோ, தீர்வோ இல்லாத ஒருவரை ஆதரிப்பது "முட்டாள்" தனமே!!

Wednesday 29 April 2020

FORCE 1.0: கொரான தாக்கம் & பொருளாதார மீட்பு!!!

இவங்களே மக்களிடம் கருத்துக்கள், அலோசனை கேட்பாங்கலாம்....

 FORCE 1.0 (Fiscal Options & Response to COVID-19 Epidemic)


43 பக்க பரிந்துரையை படிக்க..
https://drive.google.com/file/d/1MmHbWhSQPH3LWJLvwlGAC2_zN6Pm6v2u/view

ஆலோசனை கொடுத்தால் நடவடிக்கை எடுப்பாங்கலாம்...

//As the nation went into a strategic and defensive huddle, 50 plus young officers of Indian Revenue Service (IT) came together to leverage their combined knowledge, expertise and love for India and find some more solutions, suggestions and options that will help with the treatment for the economic pain that the country is suffering. Focusing thoughts and efforts on their domain knowledge and expertise, this volunteering initiative tried to identify actionable areas to mobilise revenue while protecting taxpayers’ welfare as a fiscal policy response in general and response of direct taxes administration in particular.//


அதிகாரியாக கருத்து/அலோசனை கூறும் உரிமை இல்லையா என்று கேள்வி எழலாம்...

1. தனிநபராக ஒரு இராமசாமியாக, கந்தசாமியாக கருத்து கூறலாம். ஆனால், எந்த "அடையாளத்தின்" போர்வையில் கொடுக்கிறோம் என்பது தான் சிக்கல்.... கடுதாசி கட்சியின் (Letter-Pad Party) தலைவராக கருத்து கூறுவது பிரட்சனை இல்லை, ஆனால் அரசு அதிகாரியாக அரசின் நோக்கத்தை பிரதிபளிக்கும் இடத்திலிருந்து இதை செய்யக்கூடாது.

2. ஆலோசனை கூறுவதன் நோக்கம், நல்லது நடக்க வேண்டும் என்பதா? இல்லை... குழப்பம் உண்டாக்குவதும், சுய விளம்பரமா என்று ஆராய வேண்டி உள்ளது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். உண்மையில் தீர்வை தேடுபவன் முதல் அதற்கான நல்ல வழிமுறையை (Modus Operandi), நெறியை கையாளுவான் என்பது குறிபிடதக்கது.

3. நடத்தை விதிகளின் (Civil Service Conduct Rules) கீழ் உள்ள முக்கிய விதி: ஒவ்வொரு அரசு ஊழியரும் எல்லா நேரங்களிலும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும், கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த சூழலிளும்  தன் பணி தகுதியை இழக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

இறுதியாக, இந்த 50 IRS அதிகாரிகளின் FORCE 1.0 அறிக்கையை Leninist Socialist Economic Draft என்று மூத்த பத்திர்க்கையாளர் திரு.சேகர் குப்தா விமர்சிக்கின்றார்.


ஆனாலும் அவர்கள் கூறிய கறுத்துகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க.... நாம் தெரிந்து கொள்ள வேண்டியது...

1. Liquidity Trap: பணவாட்டம், போதிய மொத்த தேவை இல்லாதது அல்லது போர் போன்ற பாதகமான நிகழ்வை மக்கள் எதிர்கொள்ளும்போது  கையிருப்பு பணமிருந்தும் (மேல்தட்டு மக்கள்) முதலீடு/செலவு செய்ய நல்ல ஆதாயமான சூழலுக்காக காத்திருப்பர் இதனால் பணப்புழக்க தட்டுபாடு ஏற்படுகிறது.

//Just like it was done in the case of LPG subsidy where many well off people voluntarily surrendered their LPG subsidy benefits, the tax department can encourage the super rich and those willing, to give up at least one tax subsidy/tax deduction/ tax concession for only a year- for e.g. an individual could voluntarily opt for giving up his/her 80C deduction for a year.//

//A new scheme to mobilize fund collection for Corona relief can be created wherein Individuals and HUF can be given additional deduction for Investment made in the fund upto Rs.2,50,000 just like investment under section 80C. The amount invested will have a lock-in period of 5 year and will generate interest income for the investor based on what government pays for various small scale saving instruments. Section 13A and 13B may be amended to allow Political Parties and Electoral Trust to invest in the aforementioned fund. This will help the government mobilize funds while allowing these entities to save while earning interest income.//

2. Helicopter Money: மந்தநிலையின் போது அல்லது வட்டி விகிதங்கள் பூஜ்ஜியமாக வீழ்ச்சியடையும் போது பொருளாதாரத்தைத் தூண்டுவதற்காக, பொதுமக்களிடையே "புதிய பணம்" அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும்.

//By all accounts, the greatest economic brunt of Covid-19 will be borne by the poor and low-income earning segment of our population. Therefore, the government’s primary focus should be on providing income support, especially to the underprivileged segments such as daily wage workers, migrant labourers, and the like. For the tax-paying population, the government needs to boost household consumption expenditure to boost demand, for which tax provisions that incentivize savings may need to be tweaked. Among corporates, the small and medium enterprises segment (SME) would be the hardest hit. This sector is also important from the perspective of job creation and retention of existing jobs in this period. But as we all know – Kosha Muloh Dandah. Such a large scale expansion of mandate will need to be financed, and that will require revenue. Tax revenues – both direct and indirect – are expected to take a substantial hit due to the loss of economic activity (for a detailed revenue impact analysis, see section on “Revenue Impact Analysis”.//

3. Stimulus: Fiscal Stimulant என்பது பொது செலவினை அதிகரிப்பது அல்லது வருமான பகிர்வு செய்வது அல்லது வரிகளை குறைப்பது குறிக்கிறது. Monetary Stimulus என்பது வட்டி விகிதங்களைக் குறைத்தல், Quantitative Easing அல்லது பணம் அல்லது கடனின் அளவை அதிகரிக்கும் பிற வழிகளைக் குறிக்கிறது.

//Moreover, the non-compliance behavior is entrenched in the taxpayer population and they carry forward it for longer time before turning to compliant. It is also difficult to regain the tax base in a rebounding economy. If it is unchecked, there is substantial revenue foregone and unfair competitive advantage for the non-compliant companies. There should be provision for transparent, adequate fiscal stimulus in a rule bound manner. So, there should not be systemic encouragement of tax non-compliance. The relief measure should be restricted to the honest compliant taxpayers, especially to those filing the return.//

//Ministry of health & family welfare can use a significant portion of Rs. 67,111 crores budgeted for the whole year in the first quarter of Q1’2020. The Covid stimulus package announced by the Government of India thus far amounts to 0.8% of GDP. Prima facie, this pales in comparison with 11% in the case of US, 15% in the case of UK, and 16% in the case of Malaysia. However, India’s Covid stimulus package was not the end, it was just the beginning. If additional revenues can be mobilized through some of the steps proposed above, the Government will have the legroom to significantly expand the scope and size of the stimulus/relief package without making a huge dent on its fiscal deficit position.//

4. Main objective of Taxation policy is "Price Stabilization" ஒரு சிலரிடம் மட்டும் அதிக பணமிருக்க மறுபுறம் மக்கள் வறுமையில் வாட... இருவருக்கும் இடையே உள்ள வருமான இடைவெளியை குறைக்க பயன்படுத்தும் கருவி "வரி வதிப்பு".

//In terms of financing, there is a general consensus that the government needs to run a much larger fiscal deficit in the coming few years in order to revive economic growth. However, a very high fiscal deficit may make the government’s debt burden unsustainable, leaving it with very little fiscal space for further interventions whenever necessary. Accordingly, there should be an attempt to identify creative ways to mobilize additional tax and non-tax revenue, without in any way burdening the taxpayers.//


//In times like these, the so called “super rich” have a higher obligation towards ensuring the larger public good. This is for multiple reasons – they enjoy a higher capacity to pay with significantly higher levels of disposable incomes compared with the rest, they have a higher stake in ensuring the economy springs back into action, and their current levels of wealth itself is a product of the social contract between the state and its citizens. Most high-income earners still have the luxury of working from home, and the wealthy can fall back upon their wealth to cope with the temporary shock. In view of several European economists, taxing the wealthy would be the most “progressive fiscal tool”, as wealth is far more concentrated than income and consumption.//

5. Spill over effect of Public Investment: அரசாங்கம் செலவு செய்வதன் மூலம் தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும் என்பது உண்மை ஆனால் அதற்கான காலமும சூழலும் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் Liquidity Trap நீடிக்கும்.

6. FRBM Act & Fiscal Deficit: அதன் செலவினங்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கத்தின் வருமானத்தில் பற்றாக்குறை. நிதிப் பற்றாக்குறையைக் கொண்ட அரசாங்கக்கொள்கை. இதனை தளர்த்துவது பற்றி திராஸிட பொருளாதார நிபுனர் திரு.ஜெயரஞ்சன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

//The ‘escape clause’ provided in the Fiscal Responsibility and Budget Management Act, 2003 was invoked already provided for FY 2020-21, allowing the Government to deviate from an earlier planned fiscal path and target a higher fiscal deficit. Also, as per the Medium Term Fiscal Policy Statement, the growth rate in direct taxes is expected to be 13.60% for FY 2021-22 and 13.80% for FY 2022-23.//

7. Google Tax or Equalization Levy: திசைதிருப்பப்பட்ட இலாப வரி, குறைந்த அல்லது பூஜ்ஜிய வரி விகிதங்களைக் கொண்ட பிற நாடுகளுக்கு தன் இலாபங்கள் அல்லது ராயல்டிகளின் திசைதிருப்பப்படுவதை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பு/எதிர்பு நடவடிக்கை விதிகள் இவை.

//Rationalization of Equalization Levy: “Equalization Levy”, also known as “Google Tax”, was introduced by the Finance Act, 2016 on certain non-resident businesses on certain “specified services”, largely those providing advertisement space and services. The revenues are taxed at 6% on gross basis. Finance Bill, 2020 proposes to expand the scope of the “equalization levy” to include consideration received by e-commerce operators from e-commerce supply or services, and taxed at a rate of 2%. The Corona economy is largely a digital/online/e-commerce economy. The consumption of online services, especially web streaming services such as Netflix, Amazon Prime, Zoom, etc. and the increased dependence on online commerce has made this sector flourish. The increased business of these e commerce/ online streaming/ web services companies provides an opportunity to increase the said tax rates by 1%, i.e. from 6% to 7% for ad services, and from 2% to 3% for e commerce.//

இந்த சூழலில் FORCE 1.0 பரிந்துரைகளை உற்று நோக்குவது அவசியமே!!


Thursday 23 April 2020

சுயமரியாதை சூரையாடும் ஃபார்வர்டு கலாசாரம்!!!



அதேதான், இங்கு பெருங்கூட்டம் தான் பார்க்கும் எல்லாவற்றையும் ஃபார்வேர்டு செய்துவிட்டு, ஸேர் செய்துவிட்டு தன்னை ஒரு அறிவாளியாக என்னி சிலிர்கிறது 🤦‍♂️

இதுனால கட்சியில் "வட்ட செயலாளர்" பதவியும் கிடைக்காது, "சதுர செயலாளர்" பதவியும் கிடைக்காது.... உங்களுக்குள்ளேயே மாற்றி மாற்றி சங்கி-மங்கி, ரூ.2 இல்ல ரூ.200 பட்டம்👨‍🎓👩‍🎓 கொடுத்து பெருமை பட வேண்டியதான்....

அதுவும் அந்த பதிவுகளை உருவாக்கிவருக்கே சமர்பனம்👨‍💻👩‍💻....

நாம் ஸேர் செய்யும் பதிவுகளை எதிர்தரப்பினர் கேள்வி கேட்கும் நிலையில்🤷‍♂️ நமக்கு இரண்டே வழிதான்...

1. எய்தவனை கேட்டுகொள் நான் வெறும் அம்பு தான்🤸‍♂️ என்று விளகுவது... அதாவது "பொதி சுமக்கும் கழுதை" போல!!!

2. "எல்லாம் எனக்கு தெரியும்" என்று நமக்கு நாமே அறிவாளி என்று என்னிகொண்டு செல்வது🚶‍♂️

குறைந்தபட்ச தேடலுமில்லை, சுயமாக சிந்திக்கும் அறிவும் இல்லை....

இப்படி நிலையற்ற அரசியல் சித்தாந்ததிற்காக, தலைவருக்காக நம் சுய மரியாதை இழந்து, தன்மானத்தை அடமானம் வைத்து, மதிபற்றவராக வீழ வேண்டாம்.....

எந்த செய்தியும் பகிரும்முன் C.R.A.P. Test செய்யுங்கள்!!

C.R.A.P. Test?



முதலில் 'C' Current - சமீபத்திய நிகழ்வா என்று பார்க வேண்டும்.

இரண்டு 'R' Reputable -  மதிப்பு, நம்பக தன்மையை உறுதி செய்ய வேண்டும்

மூன்று 'A' Authenticity, Author - எழுதுபவரின் சார்பு, சுயலாபதிற்காக, பதவி ஆசைக்காக கட்டுகதைகளை உருவாக்கும் "மேதைகள், அறிஞர்கள்" இங்கு உண்டு!!

இறுதியாக 'P' Purpose - அந்த கட்டுரையோ, பதிவோ, மீம்ஸ்கலோ... அதன் நோக்கம் பற்றிய தெளிவு வேண்டும்.


ஒரு எடுத்துகாட்டு இங்கே!!

இதோ... "Voice of South India" எனறு ஒரு சமூக வளைதல பக்கம்... சாலையோர காய்கனி வியாபாரிகள் தாக்கப்படும் காட்சி, இது குஜராத்தில் நடந்தது. அதற்கு அந்த காவல்துறை சார் ஆய்வாளர் பணியிடை நீக்கம செய்ய பட்டுவிட்டார்....

இது நடந்த நிகழ்வுதான், இதனை இந்த "Voice of South India" பக்கம் வெளியிடும் துவனியை பாருங்கள்....

"ரிலையன்ஸ் ஃப்ரஸில் மட்டும் தான் வாங்க வேண்டுமா?" என்று முடிக்கிறது... இங்குதான் "நோக்கத்தை" ஆராய வேண்டும். விளக்கம் வீடியோவில்....


எ.கா. 2
நல்ல முயற்சிகளுக்கு பாராட்டு.. #TheQuint



இதுதான் உண்மையில் #Verified or #FactCheck..... 
கற்றுக்கொள்வோம், தெளிவடைவோம்...

இங்கு நிறைய ஆ(டு)ட்கள், பொய் தகவல்களை உடைப்பதாக கூறிக்கொண்டு தன் அரசியல் சித்தாந்த பற்றுக்காக, ஆண்டவர்-அடிமை உறவுக்காக புதியதாக ஒரு பொய்யை பரப்புகின்றனர்...

உண்மையை அறிய "தேடல்" தான் மிக அவசியம் ஆனால் நம்ம ஆட்கள் பெரும்பாலும் "கற்பனையை" மட்டுமே பயன்படுத்துவர்!!!

Beware of #Propaganda
Be #Rational
#EducateYourself

எ.கா.3

Am completely against any kind of "Name Calling" or "Branding"

சுயமாக சிந்திகக்கூடிய எவரும் இந்த இழிவான காரியத்தை செய்ய மாட்டார்கள்... கருத்து சுதந்திரம் என்பது "கருத்துகளை மறுக்க/எதிர்க" மட்டுமே... தனிமனித தாக்குதல், கொச்சை படுத்துதல் என்று பயனிக்கும் "அறிவுக்கு" அது கண்டிபாக புரிய வாய்பில்லை!!

Here i mentioning few names, just for an understanding.... Apologizes....

அரபு நாடுகள் பற்றியும், மற்ற நாட்டின் கலாசார, பண்பாடுகளை காயபடுத்துவதாக, இனவாதம், மதவாதம் பேசும் வலதுசாரி அரைவேக்காடுகளே "சங்கிகளே" "பக்தாக்களே"....
#BeRational

இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சற்றும் கவலையின்றி... தன் அரசியல் சித்தாந்த அடிபடைவாதத்தில் சிலிர்த்து கொண்டாடும் இடது சாரி அரைவேக்காடுகளே "உண்டியலே", "உ.பி. தோழர்களே", "அர்பன் நக்சல்களே"...
#StopPoliticization

நாட்டோட இறையான்மை பாதிகின்றது பற்றிய அக்கரை இல்லை... உள்ளூர் அரசியலே தகுடுதித்தோம் நமக்கு, இதுல மானத்த வாங்குறானுங்க.... 
#AntiIndian


உங்களுக்கெல்லாம் "கைதட்டுங்க, விளகேத்துங்க" சொல்லி டாஸ்க் கொடுத்து பிஸியா வைக்கனும்... 

நம்ம அறிவுக்கு அவ்வளவு தான் தகுதி.... ஒருத்தனும் திருந்தமாட்டானுக!

படித்து மற்றவனுக்கு அறிவூட்ட வேண்டியவர்களே இன்று பொறுப்பற்ற சித்தாந்த அடிபடைவாதிகளாக இருப்பது காலத்தின் கொடுமை!!

என்னை பொருத்தவரை சுயமாக சிந்திக்க தெரியாத நீங்க எல்லோரும் ஓரினமே!!!
#Fundamentalist

அறிவை வளர்த்துகொள்வோம்... நமக்கு என்ன தெரியுமோ அதை செய்வோம்.... #SocialTrending என்ற போதையில் தொற்றை பரப்பாதீர்கள்.... 

Please, Keep Distance and Avoid Contagion!!!
#BeResponsible 
#StaySafe 

என்னோட அஜன்டா... நான் எப்போதும் சொல்வதுதான்....


Sunday 19 April 2020

நம் இளைய பாரதம் "Aspiring வட்ட செயலாளர் வண்டுமுருகன்களால்" வழிநடத்தப்படுகிறதா?

இன்றைய தலைமுறை எப்படி வளர்ந்து வருகிறது என்பதை பார்த்தால்....

நம் பொருப்பும், கடமையும் கேள்விக்குள்ளாகின்றது....


#ScientificInquiry #Rationalism
என்றெல்லாம் பதிவிட்டாலும்.... தேடல் நம்மிடம் மிகவும் குறைந்துவிட்டது என்பதை மறுக்க முடியவில்லை... எந்த செய்தியையும் அறிவு கொண்டு சற்றும் சிந்திகாத ஒரு போக்கு நிலவுகின்றது.... #ReadingBetweenLines

சுய அறிவு என்பது... ஒரு விஷயத்தை ஆதரிக்கவோ-எதிர்க்கவோ போதுமான காரண-காரணிகளை ஆராய பொருமையும், புத்திக்கூர்மையும் வேண்டும்.

ஆனால் நாம்... எதுவாக இருந்தாலும்... இது சரியா-தப்பா... யாராச்சு பத்து நிமட வீடிவிலோ, 2 நிமிட மீம்ஸிலோ சொல்வதை நம்பி பின் செல்லும் அறிவாக உள்ளோம்....

கட்சியில் பதவி-பொருப்பு பெற போராடி கட்டுகதைகளை, வன்மத்தை, வெறுப்பை பரப்பி பிரபலம் அடைய என்னும் இந்த "Aspiring வட்ட செயலாளர் வண்டுமுருகன்கள்"
பின்னே செல்கின்றோம்....

இப்படி சுயநலம் பிடித்து மக்களின் சுய அறிவை குறைக்கும் இந்த கனவான்கள் தான் நம் நாளைய தலைவர்கள்...

அப்புறம் ஜனநாயகத்த குறை சொல்லாதிங்க!!!
#ThreattoDemocracy

விலகி இருப்போம், விழிப்போடு இருப்பாம்.

மாற்று சிந்தனை தவறில்லை, விமர்சனம்-குறைகூறுவது தவறில்லை.... ஆனால் "சுய அறிவை" சற்றும் பயன் படுத்தாமல் "கற்பனை, கட்டுகதைகள்" பின்னே செல்வது தான் ஆபத்து!!!


இலக்கிய விமர்சனம் செய்ய தன் "தகுதியை" வளர்த்துகொள்பவன் "நல்ல படைப்பாளி" ஆகிறான்... என்று திரு.ஜெய மோகன் அவர்கள் கூறும் கருத்து அரசியல்-பொருளதார  விமர்சனம் செய்பவர்களுக்கும்
பொருந்தும்.

முழு காணொளி இணைப்பில்.....
https://youtu.be/xwd2_JgiYzo

"மாற்று" அரசியல், "மாற்று" சித்தாந்தம், "நடுநநிலை"அரசியல் என்று களமிறங்கியவர்கள் எல்லாம் ஏற்கனவே இருக்கும் "சித்தாந்ததிற்கு" பங்கம் வந்துவிட கூடாது என்பதற்குதான் செயல்படுகிறார்கள் என்று தோன்றவில்லையா?

தனி நபர் விமர்சனம், கொச்சை படுத்துதல், ஆபாச விமர்சனம், தனிமனித தாக்குதல் என்று  எதிர் கருத்துகளை தகர்கும் உத்தியில் எந்த மாற்றமும் இல்லாத பழமைவாதியாகவே உள்ளார்கள் பெரும்பாலும்!! #Branding

பல காலமாக,  நம் செய்தி ஊடகங்கள் தினமும் இரவு "வட்ட மேசை விவாதம்" நடத்துவதே....

மக்கள் சுயமாக சிந்தித்துவிட கூடாது என்ற நற்றெண்ணத்தில் தான்!!

செய்திகளை, நிகழ்வுகளை சுயமாக ஒப்பிட்டாலே நமக்கு பிரட்சினையின் வேறும், கொள்கை முடிவுகளின் நியாயமும் புரிந்துவிடும்!!! #ReadingBetweenLines

Most of the #Biased Media today are just IMPOSING opinions rather EXPOSING the events....

It is easiest to OFFEND but very hard to DEFEND!!


Tuesday 7 April 2020

மிரட்டும் டிரம்ப்: உள்ளூர் ஆட்டகாரர்களின் வேடிக்கை!!

ஒரு நன்பர் கேட்டார்...

ட்ரம்ப் இந்தியாவை மிரட்ட வில்லையா??
"Retaliate" என்பது கண்ணியமற்ற வார்தையில்லை யா?? நாம் இரங்கி அடி பணிந்து போவதா??


முதல், பொறுப்பில்லாத ஒருவரிடம் நாம் எதையும் எதிர் பார்ப்பது நமது தவறு. (இத்தனை நாள் கேலி செய்த ஊடகம் இன்று சுயலாபதிற்காக மாற்றி பேசுகிறது)

இரண்டு, எதிர் வினை என்றால் வர்த்தகத்தில் தானே, இருக்க தான் செய்யும்.

மூன்று, நாம் நம் நிலையிலிருந்து தவராமல் பொறுமையோடு கண்ணியம் காப்பது நம் கடமை. (உலகமே நம்மை பார்த்து கொண்டிருகிறது)

அமெரிக்காவை எதிர்த்து ரஷ்யாவிடம் S400, ஈரான் யிடம் கச்சா எண்ணெய்,  பல இடத்தில் எதிர்த்து எதிர்த்து செயல்பட்டிருக்கின்றோம்.

இறுதியாக, ஒரு பாயின்ட் ஒடைக்கவா?? அது "அதிபர் ட்ரம்ப்" பயன் படுத்திய வார்த்தையே இல்லை....

ஒரு செய்தி நிருபர் கேட்கின்றார் "Are you worried about Retaliation, regarding export of Pharmaceutical goods like Indian PM decision?"

இருப்பினும்...  அவர் விளக்கத்தில் பயன்படுத்திய "நட்பு, சாதகமான நாடு, வர்தக இலாபமடைந்த நாடு"  என்ற வார்த்தைகளை விடுத்து கடைசி வார்த்தை "Retaliate" என்ற ஒரு வார்த்தை "எதிர் வினை/ விளைவு" அதுவும் ஊடகவியளாலர் கேள்வி அது, அதை மட்டும் பிடித்து கொண்டு மிரட்டலா என்று விவாதம், வட்ட மேசை மாநாடு நடத்த இவர்களால் மட்டும் தான் முடியும்.


நம்ம உள்ளுர் ஆட்டகாரங்க வேற லெவல்!!!

இதயும் தாண்டி வேற லெவல் ஃபன் இருக்கு... வீடியோ பாருங்க!!

---------
சுருக்கமாக:

20 மார்ச்: ட்ரம்ப் இந்த HCQ மருந்து COVID-19 எதிர்த்து நல்ல பலன் தரக்கூடியது என்று அறிவிக்கின்றார்.

அமரிகாவில் அதிக தேவை ஏற்படுகிறது (Demand -Supply)

இதில் உலகத்தின் 70% HCQ உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.

இந்தியாவின் மாத உற்பத்தி 20 கோடி அலகுகள்.

22 மார்ச்: இந்தியாவில் "ஜனதா ஊரடங்கு" அதை தொடர்ந்து "லாக் டவுன்"

இப்போ சிக்கல், உற்பத்தி தடைபடுமல்லவா!!

25 மார்ச்: கையிருப்பு நிலையறியும் வரை HCQ ஏற்றுமதிக்கு தடை.

இதில் சில விதிவிலக்கு இருந்தது.

i) முன்கூட்டியே வெளியேறும் ஆணைகள் பெற்றவை.
ii)மனிதாபிமானத்தேவைகள்: வழக்கு வாரியாக
iii)சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (SEZ) உற்பத்தி

2 ஏப்ரல்: திருப்பம். அதுவரை
இந்தியாவில் குறைந்த அளவே இருந்த  COVID-19 பாதிப்பு நிலை மாரியது. (டில்லி மாநாடு சர்சை)

5 ஏப்ரல்: HCQ ஏற்றுமதிக்கு தீவிர தடை.

அமேரிக்க இந்த இடைபட்ட (25 மார்ச் - 4 ஏப்ரல்) காலத்தில் அதிகம் முன் பதிவு செய்துவிட்டது.

6 ஏப்ரல்: நமது கையிருப்பு, மற்றும் உற்பத்தி சாத்தியங்கள் அளவிடபட்டு, இந்திய அரசு தடையை தலர்த்த முடிவு செய்தது.

10 கோடி உற்பத்தி உறுதி செய்யப்பட்டது. COVID சிகட்சைக்கு தல ஒருவர்க்கு 14 மாத்திரைகள் தேவை. இதை கொண்டு 70 லட்சம் பேருக்கு சிகிட்சை அளிக்கலாம்.

7 ஏப்ரல்: வெளியூர் ஆட்டகாரனின் குதர்கமான கேள்விக்கு கதையின் நாயகன் ட்ரம்ப் உளர... நம்ம உள்ளூர் ஆட்டகாரர்கள் அதை வைத்து ஒருநாள் பொழுதை கழித்தனர்.
--------

திரு. ஆர்.ஸ்.பாரதி குறிப்பிட்டது போல சில ஊடகங்கள் செய்வதை என்னவென்பது??

ட்ரம்ப் "எங்கள் விநியோகத்தை வெளியே வர அனுமதித்தால் நாங்கள் பாராட்டுவோம் என்று நான் சொன்னேன், அவர் அதை வெளியே அனுமதிக்கவில்லை என்றால், இருக்கட்டும், ஆனால், எதிர் வினை தானே? இருக்கலாம்,இல்லாமல் என்ன?”

இத்தனை நாள் உலகத்தை ஆட்டுவித்த வளர்ந்த நாட்டின்  "பொறுப்பற்ற கோமாளி" தலைவனாக பார்க்கப்பட்ட அமேரிக்க அதிபர் திடீறென்ரு இன்று ரனகல வில்லனாக சித்தரிக்கப்படுகிறர்...
"மிரட்டுகின்றார்" ( Retaliate என்ற ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு)

இவர்களின் அரசியல் பற்றுக்காக, சித்தாந்த சார்புக்காக, மக்களை, நேயர்களை, வாசகர்களை "எலிகலாக" மாற்றுவதா??

இதையே, நாம் நம் சமூக வளைதலதில், நம் நண்பர்களுக்கும், குடும்பத்தினர்க்கும்  செய்வது நியாயமா??

அறிவை வளர்த்து கொள்வோம்.

அரசியலுக்காக கட்டமைக்கபடும் கதைகளை, உணர்ச்சியை தூண்டும் ஆதாரமற்ற கேலி படங்களுக்கும், பொய் செய்திகளுக்கும் நம் அறிவை அடமானம் வைத்துவிட வேண்டாம்....

#EducateYourself #StopPoliticization

சர்சயை தெளிவாக புரிந்துகொள்ள கனிசமான சான்றுகளை  தேடி படிக்க கற்று கொள்வோம்..

ஆதாரப்பூர்வ மாற்று  கருத்துக்களையும் பதிவிடுங்கள்....

நம் ஒற்றுமையை பரைசாற்ற #9baje9Minute தீபம் ஏற்றுங்கள் என்று பாரத பிரதமர் அழைத்தபோது, உ.பி. மாநில பா.ஜா.க. மகளிர் அணி தலைவர் "வான் நோக்கி துப்பாக்கி சூட்டிலீடுபட, காவல் துறை வழக்கு பதியப்பட்டுள்ளது"

"உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்"என்கிறார் அவர்..

Emotion vs Intelligence

மனதிற்கும் அறிவுக்கும் எப்போதும் ஒரு போராட்டம் இருக்கும்.

Emotion (உணர்ச்சி) - இது எளிதாக ஒருவரை செயல்பட வைத்துவிடும்... ஆம் கோபம், அழுகை, வெறுப்பு, அன்பு எல்லாம்.

Intelligence (அறிவு) -  அது எப்போதும் முட்டுக்கட்டை போடும், கேள்வி கேட்கும், நல்லதா?? நமக்கு தேவையா?? என்ன இலாபம்?? என்றெல்லாம்.

பெரும்பாலம் அறிவின் கட்டளையில் உள்ளவர்கள் எதிலும் சட்டென்று முன்வருவது கடினம், தீர்க்கமான முடிவு, தெளிந்த பதில் கிட்டிய பின்னே காரியத்தில் இரங்குவர்.

ஆனால், உணர்ச்சி வசபட்டவர்கள் இலாப-நட்டம் பாராமல், பின் விளைவுகளை கணிக்காமல் மனம் போன போக்கில் செயல்படுபர்.

நேற்று என் அனுபவம்,
"தீபம் ஏற்று" என்றதும் அதை தாண்டி என் வீட்டருகே பொறுப்பற்ற சிலர் வெடி வெடித்தார்கள். அந்த தீப்பொறி உணர்ச்சி வசப்பட்ட சிறு பிள்ளைகள், "அண்ணா, உங்க வீட்டில் ஒரு  பெட்டியில் தீபாவளி பட்டாசு இருக்கு தாங்க என்றனர்".

யாரோ செய்வதை உணர்ச்சி வசத்தால் பின்பற்ற அறிவு எதற்கு??

உணர்ச்சி தூண்டும் சமூக வளைதல பதிவுகள் தாம் வெறுப்பை, வன்மத்தை, பிரிவினையை வளர்க்கின்றது...

நாம் எதையும் பொருட்படுத்தாமல் இதை அதிகம் பகிர்வதுண்டு... உணர்ச்சி தூண்டும் எந்த செயலை, செய்தியை, பதிவுகளை பார்த்தாலும் அறிவிடம் சரனடையுங்கள்.

இல்லையேல் இது போன்ற விளைவுதான் நேரிடும்!!

"தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியம் ஆகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்"

#StandOutoftheCrowd


-------------
We need #ReadingBetweenLines

Even many in the name of #FackCheck propagate their own Agendas....

#BeRational
#StopHatredness

Don't be a carrier of Neither Corona Nor Propagandas..

#StaySafe
#SaveMankind

Saturday 4 April 2020

விளக்கேற்றுவது முக்கியமில்லை, விளங்கிகொள்வது தான் முக்கியம்!!!

asato ma sadgamaya
tamaso ma jyotirgamaya
mrtyorma amrtam gamaya
om shanti shanti shanti.
Om Peace Peace Peace.

The Brhadaranyaka Upanisad - 1.3.28


"asato ma sadgamaya"

Lead me from the asat to the sat.
உண்மையற்றதை நீக்கி உண்மையை பரப்பு!

"சத்"... "சத்தியம்"... "சத்குரு" என்றெல்லாம் கேட்டிருப்போம்...

"சத்" என்றால் உண்மை...
Truth, Real, Accurate...
"அ-சத்" என்றால் உண்மையில்லாத, பொய்யான....

"tamaso ma jyotirgamaya"

Lead me from darkness to light.
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு செல்!!

"தாமதம்" என்ற வார்த்தை கேட்டிருப்ப்போம்....
Late, Not on Time... காலம் கடத்துவது, மந்த குணம்.
வேதம் "தமஸ்" என்பதை "இருள்" என்கின்றது, இது பல பொருள் படும்... மந்த நிலை, இயங்கா நிலை, சோம்பல்....

"mrtyorma amrtam gamaya"

Lead me from death to immortality.
மரணத்திலிருந்து மரணமில்லா நிலையை உருவாக்கு!!!

"அமிர்தம்" என்று "தேவாமிர்தம்" என்று கேட்டிருப்போம்.அது மரணத்தை தடுக்கும் என்று கதைகளில் வரும்...

"மிருத்யூ" என்றால் மரணம், "அ-மீர்த்யூ" என்றால் மரணமின்மை...

அதாவது "Theism - Atheism" or "Political-Apolitical" or "Archy - Anarchy"
இல்லை "தர்மம் - அதர்மம்" அது போல...

சரி விஷயத்துக்கு வருவோம்.

அப்போ எது "அமிர்தம்"??
Eternal, Absolute, Permanence??

முதல், நாம் வழிபடும் கடவுளின் உருவம் நிலையானதா?? உறுதியானதா??
மலையையும், ஆற்றையும் வழிபட்ட நாம் கல்லை வழிபட துவங்கினோம், பின்  நிழற்படத்தை, புகைபடதை வணங்குகின்றோம்... எதிர்காலத்தில் மெய்நிகர் உருவத்தை (Virtual Image, Augumented Image) வழிபட வாய்ப்புகள் உண்டு!!

அதுவே உறுதியில்லாத போது, கடவுள் மறுப்பையே மதமாக கடைபிடிப்பவர்களை எண்ணிபார்க்க தோன்றுகிறது!!! (Self-Righteous)

இரண்டு, மதம் உறுதியானத?? நிலையானதா??

அது மாதம்-மாதம் மாறும் தன்மை கொண்டது, பல குருக்கள், சன்யாசிகள், யோகிகளும் இன்றும் தொகுக்கப்பட்ட வேதத்தை, உபனிடத்தை புதுப்பித்து, சீர்திருத்திய வண்ணமே உள்ளார்களே!! (Religious Reforms)

மூன்று, நம் பழக்க வழக்கம்
மேன்மையானதா??
நிலையானதா?? உறுதியானதா??

இல்லை... அதில் மூட-நம்பிக்கைகள் உள்ளது, அது மாற்றத்திற்குறியது.

ஆனால் நாம் அறிவியலையே கண்மூடி தனமாக நம்புகின்றோமே!!
"அறிவியல்" என்பது இயற்கை பற்றிய நம் புரிதல் மட்டுமே (Study about the Nature), அது அந்த இயற்கையே ஆகாது!! (Not Absolute)

நான்கு, நமக்கு பிரச்சனை ஒருவரின் மாற்று சிந்தனையாக இருக்கலாம், சித்தாந்தமாக இருக்கலாம்.

ஆனால் நாம் வன்மத்தை, வெறுப்பை, கோபத்தை "தனி" மனிதனை நோக்கிதான் செலுத்துகின்றோம்.... அந்த மனிதன் நிலையான(Eternal) ஒன்றா??

எந்த ஒரு தனி மனிதனும் நிலையானதில்லை (Not Eternal)

ஒருவரை "பக்தாள்" என்று கூறிவிட்டு இன்னொருவரை "ஆண்டவர்" என்கின்றோம். (Self-Contradiction)

என்னை பொருத்தவரை... உனக்குள் உள்ள அதே அறிவு எல்லொருக்குள்ளும் உள்ளது... அந்த அறிவு தான் நிலையானது. #KnowledgeisEternal

திக தோழர் திரு சுப.வீ. கூறுவது போல...
"வழிபாடாக பார்க்காமல், வழிகாட்டுதலாக பார்க்க வேண்டும்"
(Think beyond Symbolism)

விளக்கேற்றுவது முக்கியமில்லை, விளங்கிகொள்வது தான் முக்கியம்!!!


om shanti shanti shanti.
Om Peace Peace Peace.


Reference:
The Brhadaranyaka Upanisad - 1.3.28"பிருஹதாரண்யக உபநிஷத்" என்ற தலைப்பு "பெரிய வனப்பகுதி Greater Wilderness அல்லது காடு உபநிஷத் Forest Upanishad" என்று பொருள்படும்.

தொகுத்தவர் முனிவர் யஜ்னாவல்க்யா.

The Brihadaranyaka Upanishad was in all likelihood composed in the earlier part of 1st millennium BCE, around 700 BCE, give or take a century or so, according to Patrick Olivelle.

------- End -------

பிரதமரின் அழைப்பு குறித்து என் பார்வை கீழே....