Tuesday 3 March 2020

நம் "கடமையை" மறக்கும் போது யாரோ ஒருவரின் "உரிமை" பறிக்கப்படுகிறது

1993-2018 வரை  இந்தியாவில் "பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யும் தொழிலாளர்கள்" இறப்பு எண்ணிக்கை 634 என்பது "தேசிய சப்ஹாய் கர்மாசாரி ஆணையம் (NSKC)" கணக்கு. இதில் தமிழகம் முதல் மாநிலம் 194 இறப்புக்கள்.


இது போன்ற செய்திகள் பார்கும் போது மட்டும் நம் இரத்தம் கொதிக்கும்... அவலம், அநீதி என்று கூப்பாடு இடுவோம்...

இந்திய அரசியலமைப்பு, பிரிவு IV, சரத்து 42.

Article 42/Directive Principle/ Constitution: Provision for just and humane conditions of work.

வேலை செய்ய உகந்த மற்றும் சரியான சூழலை அமைத்தல். யார் இந்த உரிமைகளை உறுதி செய்வது?? யார் பொறுப்பு??

நம்மால் எதுவுமே செய்ய முடியாத, சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியாத இடத்தில் இருப்பவர்களை கண்டித்து பதிவுகள் இடுவோம்.

அரசாங்கம் போதிய உபகரணம் அளிக்கவில்லை,   அடிப்படை பயிற்சி கொடுக்கவில்லை, முதலீடு குறைவு, சாதிய-சமூக அநீதி... என்று அடுக்கிகொண்டே போவோம்!!!

ஆனால், நாம் ஒவ்வொறுவரும் இது போன்ற நிலைகளுக்கு நேரடியாகவோ-மறைமுகமாகவும் காரணம் என்பதை நினைக்க மறுக்கின்றோம்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள்: 948)

வீடு சுத்தமா வைக்குறேன் என்ற பெயரில் ஊரையும், தெருவையும் குப்பையாக்குவது.

நாம் உருவாக்கும் குப்பைகளை மக்கும், மக்காத என்று பிரிக்க அசிங்க, அருவருப்பு... அதை மற்றவர்கள் செய்ய வேண்டும்!!!

கண்ணுக்கு தெரியாம எதாச்சு கால்வாய்களில் பிளாஸ்ட்டிக்கில் நுந்தி அடைக்க வேண்டும்....

இப்ப சொல்லுங்க இதற்கு எல்லாம் வேர்-காரணம் யார்?? பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட காரணம் யார்??

நாம் நம் "கடமையை" மறக்கும் போது யாரோ ஒருவரின் "உரிமை" பறிக்கப்படுகிறது.


மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவராத எந்த புரட்சியும் வெற்றி காணாது!!


#BetheChange #Bapu150
#SilentRevolution

No comments:

Post a Comment